search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை"

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் குடும்ப பிரச்சனையால் அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கச்சேரி வலசு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 31). கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சிவரஞ்சனி (28). உத்தமபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் சிவரஞ்சனி தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×